முடிகிறது
- முனைவர். ச. மகாதேவன் www.mahatamil.com
மடியிலமர்த்திக் கதை சொல்கிறேன்
'ம்' ஒலியோடு தலையாட்டித்
தூங்குகிறது என்சிறு குழந்தை
பொம்மைகளை உண்மைகளாய் நம்பவும்
செப்புச் சாமான்களில் சோறுகறி பொங்கவும்
ஆடைகளற்றுத் தெருவரை போகவும்
பொக்கை வாய் குழிவிழ அழகாகச் சிரிக்கவும்
பிடித்த கரம் நம்பி விரல் தந்து நடக்கவும்
மண்ணள்ளி மகிழ்வாய் மறைவாய் வைத்துத் தின்னவும்
சுவற்றுப் பரப்பில் சுதந்திரமாய் ஓவியங்கள் வரையவும்
இருளைக் கண்டால் தாயிடம் பதுங்கவும்
பிரணவ் போன்ற குட்டிக்குழந்தைகளால் முடிகிறது
சுள்ளென்று எரிந்து விழுந்து
அடித்துத் துவைக்க மட்டுமே
நம்மால் முடிகிறது.
This entry was posted
at 10:15
. You can follow any responses to this entry through the
.