இன்பியல்

Posted


பரியா மருதபட்டிப் பனைதேரியில்
நொங்கு நோண்டித் தின்ற
பெருவிரலின் நகக்கணுவில் இன்னும்
ஈரம் மிச்சமிருக்கிறது
அப்புறம் ஓட்டிய நொங்கு வண்டியின்
பளபளப்பு கண்களின் ஓரம் இன்னும்
மிச்சமிருக்கிறது.

விடுமுறைக்குப் போன புதுப்பட்டிப்பாட்டி
வீட்டுப் பனையோலைக் குடிசை
இன்றும் வாழநினைக்கும் வசந்தசொர்க்கம்

வாசக் குளிர்ச்சியால் மனதை வருடிய
பனையோலை விசிறிக் காற்று

தொட்டிலைச் சுமந்த உத்திரம்
நிலத்தைப் பதிந்துவைத்த பனையோலைப் பத்திரம்

யாவும் பனைதான்
யாவும் பனைதான்
என்றும் நம் மானுடத்தின்

இன்பியல் இணைதான் 

This entry was posted at 09:03 . You can follow any responses to this entry through the .

0 comments