எதுவும்
தெரியாத
மக்கென்று
பரிகசித்தாய்
கற்கத் துணிந்தேன்
மெத்தப்
படித்த திமிரென்றாய்
மெல்ல அழுததோடு
அமைதி காத்தேன்
அமைதியும்
ஒரு வகை
அகம் பாவம் தானென்றாய்
ஊமையாய்
உலவினேன்
’ஊமை ஊரைக் கெடுக்கும்
பெருச்சாளி
வீட்டைக் கெடுக்கும்’, என்று
பழமொழி கொண்டு
பலமாகத்
தாக்கினாய்
நீ குற்றம் சொல்வதிலேயே
குறியாயிருப்பவன் என்பதால்
இப்போதெல்லாம்
சும்மாயிருத்தலே
சுகமென்றிருக்கிறேன்
மூளையைக்
கூர்தீட்டி
அதற்கொரு
பழமொழியை
இதற்குள்
தேடியிருப்பாயே!
சொல்லித்
தொலை
என்ன செய்ய?
கேட்டுத்
தொலைக்கிறேன்.
- சவுந்தர மகாதேவன், திருநெல்வேலி.
This entry was posted
at 07:54
. You can follow any responses to this entry through the
.