அந்த
நாள் இசையோடு கழிந்தது .இன்டிகாவில் பயணித்தபடி தொடங்குகிறார் திரு
.,தமிழிசை மம்முது .செய்துங்கநல்லூர் தாண்டுகிறது வண்டி .வான் நோக்கி
எட்டத் துடிக்கும் மருத மரங்கள் ..பெண்கள் அரிசி புடைப்பர் ,அதற்குப் பெயர்
தெள்ளுதல் தெரியுமா ?என்றார் .அப்போது பிறந்த இலக்கியம்தான் திருத் தெள்
ளே னம் என்றார்.இசைக்கு அடிப்படை ஆனந்தம் .படுமலைப் பாலை என்ற பண் நடபைரவி
என்று இன்று பாடப்பட்டு வருகிறது .விண்ணோடும் முகிலோடும் என்ற பாடல்
,மயிலிற ஹாய் மயிலிற ஹாய் என்ற பாடல் அந்தப் பண் தான் என்றார் .காதல்
உணர்வினை த் தரும் பண் அது என்றார்.பாலை நிலத்தின் பண் அரும்
பாலை.சங்கராபரணம் எனும் பண் ணும் அதுதான் .நர்சரி பிள்ளைகள் பாடும் லண்டன்
பிரிட்ஜ் லண்டன் பிரிட்ஜ் எனும் பாடல் அந்தப் பண்தான் என்றார் .நெய்தல்
திணைப் பாடல் தோடி எனும் பண் .கங்கைக் கரை மன்னனடி ,இசை கேட்க எழுந்தோடி
எனும் பாடல் அந்தப் பண்தான் என்றார்.இசை மேதை இளையராஜா ,இசைப்புயல் ஏ .ஆர்
.ரஹ்மான் என அத்தனை இசை ஆளுமைகளும் மதிக்கும் திரு .,தமிழிசை மம்முதுஉடன்
காயல் பட்டினம் வாவு வாஜீஹா மகளிர் கல்லூரியில் சிறப்புரை ஆற்றிய
14.3.13நாள் மறக்க முடியாது .,தமிழிசை குறித்த சிந்தனை அலைகளை அந்த நாள்
தந்து சென்றது .
This entry was posted
at 04:08
. You can follow any responses to this entry through the
.