’நடு’ங்கு கற்கள்

Posted





பயணப் பொழுதுகளின்
சன்னலோரக் காட்சிகளில்
இப்போதெல்லாம்
துயரம் மட்டுமே
துண்டு துண்டாய்

நான்கு வழிப் பாதைகளின்
நடைபாதைக் கல்லறைகளாய்
வாடிச் செத்த வயற்காடுகள்

மண்ணைக் கொன்று
அதன் உயிரைத் தின்ற நினைவாய்
நடு நடுவே
புறநானூறு போற்றாத
நடுங்குகற்கள்

வாரலை வாரலை
என்பது போல்
மறித்துக் கைகாட்டும்
வண்ணக் கொடிகள்

சன்னலோரம்
அமர்ந்தாலும்இனி
பக்கவாட்டில்
பார்க்காமலிருப்பதைத்தவிர
வேறு வழியில்லை

- சவுந்தர மகாதேவன், திருநெல்வேலி.

This entry was posted at 07:31 . You can follow any responses to this entry through the .

0 comments