அப்பா சௌந்தர மகாதேவன் திருநெல்வேலி

Posted

உடுக்கப் போட்ட  
உடுப்பு மாறி விடாமலிருக்க 
  மீட்டர் பாக்ஸ் மேல் இருந்து எடுத்து 
 அப்பா எழுதிய எம் .எஸ் .ஆர் .எனும் 
  வண்ணார் குறி இளம் சிவப்பாய்
 இன்னும்  அவர் வேட்டியில் .
 

கோட்டுப் போட்ட க்
  கடவுச் சீட்டுப் படத்திற்காய் 
  எவனோ ஒருவனின்
  முண்ட உடல் மீது 
  என் தலைப் படம் சம்மந்தமின்றிப்
  பொருத்தப் பட்டதைப் பார்த்தால் 
  நிச்சயம்  
அப்பா பொறுத்துக் கொள்ளமாட்டார்  
என்பதால் அப்படத்தை
  அவரிடம் இன்னும் நான் காட்டவில்லை .
சௌந்தர மகாதேவன் திருநெல்வேலி 

This entry was posted at 05:42 . You can follow any responses to this entry through the .

0 comments