இன்று...
தொட்டணைத்து ஊற மறுக்கின்றன
மணற்கேணிகள்
இருநூறு அடிதாண்டி துளையிட்ட பின்பும்
பீலி பெய்யாமலேயே
அச்சிறுகின்றன சாலையோரத்தில் பேருந்துகள்
கார்பைடு கல்லுக்குள் இருப்பதால்
கனியிருப்பக் காய் கவர்ந்துவந்து
அரிசி டப்பாவுக்குள் வைக்க வேண்டியுள்ளது.
மோப்பக் குழையும் அனிச்சம் போலன்றி
விருந்துக்கு வராதே என
விரைவஞ்சலில் மறுத்தெழுதினாலும்
அதற்குள் வந்து நிற்கிறான் முகவாட்டம் ஏதுமின்றி.
என் பிரிய விருந்தினை
ஸ்கேன் நாடிஃ எக்ஸ்ரே நாடிய பின்தான்
மருத்துவரையே நாட முடிகிறது
யாகாவாராயினும்
நா காக்க முடியவில்லை
- முனைவர். ச. மகாதேவன்
This entry was posted
at 10:31
. You can follow any responses to this entry through the
.