உயரம் கூட ஒருவகையில் துயரம்தான் சௌந்தர மகாதேவன்

Posted


செல்பேசிக் கோபுரத்திலோ
காற்
றாலை கோபுரத்திலோ
பணியாற்றுபவனைப் பார்த்து
வானம் தொட்டுவிடும் தூரம்தான் என்று
வகுப்பெடுக்க முடியாது ,
விழுந்தால் எலும்பு கூட எஞ்சாது .
அரை ஜான் வயிற்றின் ஓலத்திற்காக
பனை உயரம் வாழ்வைப் பணயம் வைக்கிறான்
எனவே உயரத்தில் இருப்பவனெல்லாம்
உயரத்தில் இருப்பவனல்ல
உயரம் கூட ஒருவகையில் துயரம்தான்


சௌந்தர மகாதேவன்
திருநெல்வேலி

This entry was posted at 06:42 . You can follow any responses to this entry through the .

0 comments