பாளையம்கோட்டை அரசு அருங்காட்சியகம்

Posted









பாளையம்கோட்டை அரசு அருங்காட்சியகம் பெரிய வரலாற்றுப் பதிவுகள் உடைய இடமாகத் திகழ்கிறது . இந்திய சுதந்திரப் போரின் முக்கியமான நிகழ்வான பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டை முற்றுகை 1799ஆம் ஆண்டு மேஜர் பானர்மேன் தலைமையில் நடைபெற்றது . காலின்ஸ் எனும் அதிகாரி வெள்ளையத்தேவனால் கொல்லப்பட்டார் . வீரபாண்டிய கட்டபொம்மன் புதுக்கோட்டை செல்ல நேரிடுகிறது . வீரபாண்டிய கட்டபொம்மன் தம்பி ஊமைத்துரை கைது செய்யப்பட்டு பாளையம்கோட்டை அரசு அருங்காட்சியகம் அமைந்துள்ள இடத்தில் சிறை வைக்கப்படுகிறார் . தனிமைச் சிறை வைக்கப்பட்ட அந்தக் கல் அறைக்குள் நுழைகிறேன் . மனம் கனக்கிறது . காற்று கூடப் புக முடியா கொடுரமான அறை .
நடு நாயகமாக ஓவியர் வள்ளி வரைந்த ஊமைத்துரையின் கம்பீரமான ஓவியம் .
முன்னால் வீரபாண்டிய கட்டபொம்மன் பயன்படுத்திய வாள் ,சுருள் வாள் ,பீரங்கிக் குண்டுகள் .
இரும்புக் கதவு மேலும் இறுக்கமாய் இருந்தது .

அந்த ஒப்பற்ற தியாகிகளுக்கு நாம் என்ன கைம்மாறு செய்யப் போகிறோம் .

ஊமையானது பேதை மனம் .

சௌந்தர மகாதேவன் ,திருநெல்வேலி 

This entry was posted at 08:27 . You can follow any responses to this entry through the .

0 comments