அடுத்த நாளை நோக்கி சௌந்தர மகாதேவன்

Posted



இருள் கசியும் மின்சாரமற்ற இரவுகள்
தலை தெறிக்க வேலைக்கு ஓடும்
நெருக்கடியான காலைகள்
கையேந்தி பவனோடு கழியும்
மதியப் பொழுதுகள்
நசுக்கும் விலைவாசி உயர்வைச் சமாளிக்க
மிகை நேரம் பணி புரியும்
மாலைகள்
இத்தனையும் பார்த்துப் பார்த்து
எரிச்சலோடு கிழி கின்றன
காலெண்டெர் தாள்கள்
அவதியான அடுத்த நாளை நோக்கி

                                                       சௌந்தர மகாதேவன் 

This entry was posted at 00:46 . You can follow any responses to this entry through the .

0 comments